பக்கம்:நற்றிணை-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

الی ۸ طی که ۀ ميا(6 ننo ووBم ما o2ه بوډا عا كك واژه اردزاده هم خ؟ دخوم (rsدة حا ۱لمون، يه دفـ நற்றிணை தெளிவுரை - - zoʻr கருத்து :- அவன் குறித்த கார்காலம் இன்னும் தொடங்க வில்லை; அவன் உயர்குடியினன் ஆதலின் சொற்பிழையாய்ை: மீள்வன்; நீதான் நின் துயரத்தைக் கைவிடுக என்பதாம். சொற்ப்ொருள்: வீழ்ந்து - வேர்விட்டு நிலத்தினுள் இறங்கி. "வள்ளி கீழ் விழா என்று கலியுள்ளும் வரும் (கலி 39) : ஆகவே, இதனையும் குறிஞ்சிக்கு உரிய வள்ளிக்கிழங்காகவே கொள்க. துங்கி - தொங்கி. பெருங்கல் நாடன் - பெரிய மலை நாட்டுத் தலைவன். ஓர் அன்மை - ஒரு தன்மை அல்லாமை, கருவி - தொகுதி. வலன்ஏர்பு - சூல்கொண்டு கறுத்து வானில் மேலெழுந்து. தலைக - தலைப்படுக; பெய்க. எண் - எள்; எண் பிழிநெய் - எண்ணெய். விலங்குதல் - குறுக்கிடல். கலம் - அணி வகைகள். - உள்ளுறைகள் : 1) கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி என்றது, அன்பு உள்ளத்தே வேரூன்றியதல்ை களிப்பான கண்வுகள் மேலாக எழுந்து, பிறர்க்கும் புலப்படத் தோன்றுகின் றன என்பதாம். 2) சிற்சில வித்திப் பற்பல விளைந்து' என்றது. அவ்வாறே நீ செய்த சிறுசிறு அன்புச் செயல்கள் பலவான நன்மைகளைத் தரும் மணவினையாக மலிந்து பெருகும் என்பதாம். 3) கிளி கடியும் என்றதல்ை, அந்தப் பயன் கெடாதபடி பாதுகாக்கும் என்பதாம். - _4) எண்ணெய் கிழி வேண்டாதே விறலி ஆடும்' என்றது, பரிசில் பெற்றே வாழும் வாழ்வினளாகிய அவள் தானும், தான் தன் செழுமைக் களிப்பின் காரணமாகத் தானே மகிழ்ந்து ஆடுவள் எனப் பொருள்பட்டு, சுற்றத்தார் வரைபெர்ருள் யாதும் இன்றியே மகிழ்வுடன் அவளுேடு மணம்புணர்க்க இசை வர் என்பதாம். பயன் : தலைவி மணவினை நிகழுங் காலம் வரை శిలీ றி யிருத்தலும், தலைவன் மணவினைக்கு விரைதலும் ஆம். 329. கடல் முகந்த மழை! பாடியவர் : மதுரை மருதங்கிழார் மகளுர் சொகுத்தனர். தின :பால. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/271&oldid=774283" இலிருந்து மீள்விக்கப்பட்டது