பக்கம்:நற்றிணை-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ நற்றின தெளிவுரை ars உழாது, உவர் நிலத்திலே, உப்பாகிய விளைவைக் கொள்ளும் உழவராகிய பரதவர்கள், ஒழுங்காக ஒன்றன்பின் ஒன்ருக உமணர்கள் வண்டியோடு உப்பை விலைக்குக் கொள்வ தற்கு வருகின்ற காலச்செவ்வியை எதிர்பார்த்தவராக, கடற் கானலிலே குவித்து இட்டிருக்கும் காவலையுடைய உப்புக் குவியல்களின் மேலே தவழ்ந்து ஏறி நின்றவராகக், கடலிடத்தே கரைநோக்கி வரும் திமில்களைச் சுட்டியபடி, "அதோ வருவது என் தந்தையின் படகு, அதோ வருவது நின் தந்தையின்து படகு என்றும் கூவுவர். வளைந்த கடல் நீரிடத்தே மீன் வேட்டை குறித்துச் சென்றுள்ள தம் சுற்றத் தாருட்ைய திண்மையான படகுகளை அம்மகளிர் எண்ணிக் கொண்டிருப்பர். இத்தகைய தண்மையுடைய கடற் சேர்ப்பனே! எவரையும் வெறுத்தல் என்பதே இல்லாத எம்முடைய நல்ல ஊர்தானும் மிகவும் இனிமை உடையதே. இனி, நீதான் அங்கே வந்தாலும் தவறு ஏதும் இல்லை. சுற்றத்தார்களும் ஒருவர் போக்குவரவை மற்றவர் அறியாதாராக, அவரவர் தத்தம் கடம்ைகளில் மன்ஞ் செலுத்தியிருக்கும் சேரியினை உடையதாதலால், எவ்வளவேனும் நின் வரவைப் பிறர் எவரும் அறிவர் என்பதும் இயலும்ாறில்லை. ஆதலின், நீதான் அஞ்சாதே எம்மூர்க்கு வருவாயாக என்பதாம். கருத்து: இரவில் நின்னையே நினைந்து அவன் படுகின்ற துயரம் மிகவும் பெரிதாதலின், விரைவில் அவளை மணந்து பிரியாத வாழ்வைத் தருக் என்பதாம். சொற்பொருள் : ஒழுகை - வண்டிகளின் வரிசை. உமணர் - உப்பு வணிகர். பதம் - காலச் செவ்வி. குப்பை. மேடு, படுபுள் . படுகின்ற புள் - காக்கை கொக்கு போல்வன. திமில் - மீன்பிடி படகு. முனிவு - வெறுத்தல். நல் ஊர் - நல்ல பண்புடைய glossT. உள்ளுறை : பகல் வேளையிற் புள்ளோப்பியபடி மீன் உணங்கற்குக் காவலிருக்கும் பரதவர் மகளிர், மாலையில் உப்புக் குவட்டின்மீது ஊர்ந்து ஏறி நின்று, கரை நோக்கி வரும் படகு களை எண்ணி மகிழும் துறை என்றனள். இது, பகற்போதில் கானலிலே புள்ளோப்பியிருந்த யாம், இரவில் மனையகம் புகுந் திருந்து, நீதான் சோலையிலே வந்து நின்று புள்ளோசையிட்டுக் குறி செய்வதை நினைந்து, இது நின்குறி என்று எண்ணியபடி நின் வரவையே எதிர்பார்த்திருப்போம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/277&oldid=774297" இலிருந்து மீள்விக்கப்பட்டது