பக்கம்:நற்றிணை-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 23 கின்ற வேங்கையும் இனி மலர்வதாகுக என்று சொல்லிய வளாக, என் முகத்தையும் கூர்ந்து நோக்கினள். அதுதான் எதேைலா, தோழி? புனங்காவலுக்குச் சென்று வருக என்றனளோ? இனி மனைக்கண்ணேயே செறித்துவைப் பேன் என்றனளோ? மலைநாடனது நட்பினை அன்னையும் அறிந்தனளோ? யான் யாதும் அறிந்திருக்கின்றேனே தோழி! - - சொற்பொருள் : புனிற்றுக் குரல்-இளைதான தினைக் கதிர்கள். பால் கொள்ளல்-பாலேற்றுக் காய்ப்பருவங் கொள்ளுதல். இறைஞ்சி-தலைசாய்த்து. தோடு-மூடியுள்ள மேலிலைகள். துறுகல்-வட்டக் கற்பாறை. மீமிசை-மேற் புறத்தே. பாசினம்-பசிய கிளியினம், தட்டை-கிளிகடி கருவிகளுள் ஒன்று. நன்ள்ை-திருமணத்திற்கான நல்ல நாள். அலர்க-மலர்க. விளக்கம் : தினக் கதிர்கள் பாலேற்றுக் காய்ப்பருவம் எய்தின; ஆதலின் கவர்ந்துபோகக் கிளியினம் வருதல் கூடும்; அவற்றை வெருட்டக் கிளிகடி கருவிகளை எடுத்துக் கொண்டு புனங்காவலுக்குச் செல்லுதல் வேண்டும் என்று நினைத்திருந்த அன்னை அது கேட்டு, நன்ள்ை வேங்கையும் அலர்க என்று கூறியவளாகத் தோழியை நோக்குகின்ருள். மலைநாடைேடு தலைவிக்கு நேர்ந்துள்ள நட்பை அறிந்த தோழி திகைக்கின்ருள். அன்னைக்கு உண்மை தெரிந்து தான் அப்படிச் சொன்னளோ எனக் கலங்குகின்ருள். இவ்வாறு அமைந்துள்ளது செய்யுளின் பொருள். இதனைச் சிறைப்புறமாக நின்று கேட்கும் தலைவன், தலைவியை விரைய மணம்வேட்டுக் கொள்ளுதலிலேயே மனஞ்செலுத்துவான்; அப்படிச் செலுத்தவேண்டும் என்பதுதான் தோழியின் கருத்துமாகும். கதிர் முற்றித் தலைசாய்ந்த தினையைக் கவர்ந்து போகக் கிளியினம் வந்து குழுமுவதுபோலப் பருவ மலர்ச்சியுற்ற தலைவியைக் மணந்துகொள்ளக் கருதிப் பலரும் வருதல் கூடும். அவரிடமிருந்து அவளைக் காத்தல் வேண்டும் எனவும் உட்பொருள் அமைத்துக் கூறியதாகவும், அதனைக் கேட்டு உணர்ந்தே தாய் வேங்கை மலர்க என்ருளாகவும் கொள்ளு தலும் பொருந்தும். 'திருமணம் செய்யப் பெற்ருேர் கருதினர். அவள் இனி இற்செறிக்கப் படுவாள்; களவுக் குறி வாய்த்தல் அரிது; விரைய மணத்தற்குமுயல்க' என்பதும் உணர்த்தப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/29&oldid=774326" இலிருந்து மீள்விக்கப்பட்டது