பக்கம்:நற்றிணை-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 நற்றிணை தெளிவுரை வர்களும், தெளியாத நெஞ்சத்துடனே செயலழிந்து வாடும் படியர்க, ந்ெடிது காலம் விரும்பாதிருப்பார் ஆயினல், அதன் பின்னும், அருள்தலை எதிர்பார்த்து உயிர்வாழ்ந்திருத்தல்தான் எதற்காகவேர்? ஆகவே, நின் தெளிவுப் பேச்சுக்களும், இனி, அழிந்து இல்லாதேயே போவனவாக என்பதாம். கருத்து: நின்ன நம்பி உறவாடிய எமக்கு வருத்தமும் சாவுமே பரிசுபோலும் என்று வருந்தியது இது. - சொற்பொருள் : கானல் - கடற்கானல். கண்டல் - கடற் கரைப் பாங்கிலுள்ள ஒருவகை மரம், உட்பட-உள்ளே சென்றுமறையுமாறு. உறுக்ால் - எழுந்த காற்று. ஆவித்தன்னகொட்டாவி விட்டாற் போல. சால்பு - சான்ருண்மைப்பண்பு. எதிர்கொண்ட . எதிரேற்றுக் கொண்ட கையறுதல் - செய லழிதல்: கை முயற்சி; செயல். அறுதல் - அழிதல். தெளிவு - தெளிவிக்கும் நிலை. உள்ளுறை : மலரும் பருவத்தை அடையாத பொதியரும் பும், கண்டற்காய் வீழ்ந்ததால் வருத்தமுற்று மலரும். அது போல அலருரைக்கும் ப்ெண்டிரின் தூற்றுதல்ால், இதுகாறும் தன் உள்ளத்துயரை மறைத்து வாழ்ந்த இவள், இனி வாய் திறந்தே புலம்புதலும் கூடும் என்பதாம். - விளக்கம் : காற்ருல் உதிர்க்கப் பெற்ற கண்டற்காய் ஆம்பல் அரும்பை மலர்வித்துப் பின்னே உட்சென்று கழிச் சேற்றுள் மறையும் என்பது மிக நல்ல உவமையாகும். "பைங்காய்' என்றது, அதுவும் வீழும் பருவத்துக்கு முன்னே காற்ருல் அலைப்புண்டு வீழ்ந்தது என்பதாம். பசுங்காய்' தாயைக் குறித்ததாகக் கொண்டால், அலராலே சினமுற்று வீடுவந்த அன்னை, இவள் உள்ளடங்கிய காமநோயை வலிந்து வெளித்தோன்றச் செய்வள் என்றலும் ஆம். w இனிக், காற்ருல் வீழ்ந்த கண்டற்காய் ஆம்பல் முகையை மலரச் செய்தாற்போல, அலராலே எழுந்ததுாற்றுதல் தலைவன் உள்ளத்தையும் தாக்கி விரைவில் மண்ம்புரிந்து கொள்ளும்படி செய்யும் என்பதுமாம். அளிய பெரிய கேண்மை நும்போல’ என்றது எள்ளற் குறிப்பு. மேற்கோள் : "இஃது ஆற்ருத தலைவியைக் கடிதின் வரை வேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளி விடை விலக்கியது என்று குறிப்பிட்டு, இச் செய்யுளை நாற்றமும் தோற்றமும் (தொல் 114) என்னும் தொல்காப்பியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/306&oldid=774364" இலிருந்து மீள்விக்கப்பட்டது