பக்கம்:நற்றிணை-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:് വe് N . طيبه நற்றிணை മങ്ങ് 337 சொற்பொருள் : வினை - கை வினை த் தி ற ம். பாவை - எந்திரப் பாவை. இயலி - நடந்து வந்து. மனைவரை - வீட்டின் எல்லை. இறந்து கடந்து, தலைநாள் - முதல்நாள். அணி - அழகு. செம்மூதாய் - தம்பலப் பூச்சிகள். கண்டும் - அது ஒடும் அழகினைக் கண்டும்; கொண்டும் - கையிற் பற்றி அதன் மென்மையும் அழகும் வியந்தும். மழ்களிறு - இளம் களிறு. உரிஞ்சிய. உரிந்திட்ட மணல் இடு மருங்கின் - மணல் இடப் பெற்றுள்ள பக்கத்திலே. இரும்புறம் - பெரிய பின்புறம். மாஅயோள் - மாமை நிறத்தவள்; மாயவள் போன்முளும் ஆம். விளக்கம் : எந்திரப் பொற்பாவை போல இயங்கி" என்றது, அவள்தான் தன் அறிவினல் எதனையும் ஆராயாமல் காதல் வேகத்தாலே இயக்கப்படும் பொம்மைபோல இயங்கி என்பதாம். தம்பலப் பூச்சிகளைப் பற்றி விளையாடுதல் சிறுமியர் மரபு. இதல்ை கார்காலம் வந்தது என்பதையும், அது மணவினைக்கான காலமாகும் என்பதனையும் உணர்த் தினன். 'அமர்வரின் - போர் வந்தால் என்றது, ஆறலைக் கள்வரோ பிற கொடியரோ போருக்கு வந்தால் என்றதாம். பெயர்க்குவென் என்றது, அவ்ர்ை ஒட்டுவேன் என்று. ஆண்மை தோன்றக் கூறியதாம். நூமர் வரின் மறைகுவன் என்றது, அவருக்கு ஊறுவிளைவிக்கும் கொடுமை தன்பால் இல்லை என உரிமைகாட்டிக் கூறியதாம். இதல்ை அவன் வல்லமையும் அன்பும் காணும் தலைவி, தன் மயக்கம் நீங்கி, மகிழ்வுடன் அவனைப் பின்பற்றிச் செல்வாளாவள் என்பதாம். இறைச்சி : வேங்கையானது, மழகளிறு தன் பராரை யினை உருஞ்சிய பின்னும், தன் நிலையிற் குன்ருது நின்று செழித் திருக்குமாறு போலத் தானும் எத்துயர் வரினும் குன்ருது, அவளைக் காத்து நிற்கும் வலிமையாளன் என்பதாம். - பயன் : அவள் அச்சமும் சோர்வும் நீங்கியவ ளாக அவனுடன் அவனுர் செல்வாள் என்பதாம். பாடபேதம் : அகன்றலைப் பறந்த 363. மணல் கொண்டு வருக! பாடியவர் : உலோச்சனர். திணை : நெய்தல். துறை : 1. பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை என்னை ஆற்றுவிக்கும் என்று ஆகாதோ எம்பெருமான் கவலாது. செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்முல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/341&oldid=774444" இலிருந்து மீள்விக்கப்பட்டது