பக்கம்:நற்றிணை-2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 349 | யுடைய வேங்கை மரத்திலே தொடுத்துள்ள ஊசலிலே அமர்ந்து ஆடியும், பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே பசுந்தழையால் அமைந்த உடையணிந்தும், உம்மோடு அருவியாடியும் வருதலைக். காட்டிலும் இனிதாவது ஒன்றும் எமக்கு உளதாகுமோ? நெறிப் பமைந்த கூந்தலிலே கருமை முதிர்ந்திருந்த நறுமணம் கமழ் தலைக் கொண்ட புதுநாற்றத்தையும், சிறிதளவிலே பசலைபரவிய நெற்றியையும் பார்த்து, பயனின்றிச் சிதைந்த உள்ளத்தினள் ஆயினள் யாய். பிறிதொன்றைக் காரணமாகக் குறித்தவளாக அவள் சுடுமூச்செறிபவளும் ஆயினள். அதனல், இனி யாம் என் செய்வேம்! இரங்கத் தகுந்தவராகவே யாம் ஆவோம் போலும்! என்பதாம். கருத்து: "இனி இற்செறிக்கப்பட்டு வாடி நலிவோம்' என்பதாம். . - சொற்பொருள் : பெரும் புன ம் - பெரிய தினைப்புனம்; தலைவியது தந்தையின் வளமையைக் குறித்துச் சொல்லியது. சிறுகிளி - சிறிய உருவினதான கிளி. ஒப்பி - வெருட்டி. தூங்கி. தொங்கியாடி. கோடு - பக்கம். தழை - தழையுடை நெறி. நெறிப்பு. கார்-கருமை. முதிர்பு - முதிர்ந்து. வெறி. நறுமணம். பசலை - பசலை நோய். அளியம் - இரங்கத் தக்கவராவோம். விளக்கம் : 'பெரும்புனம் கவரும் சிறுகிளி ஒப்பி என்றது, புனம் பெரிதாயினும் தினையைப் பிறர் கவர்ந்து போகாதே காத்துப் பேணும் கடமையுணர்ச்சியைக் கூறியதாம்; இதல்ை தலைவியைக் களவுறவில் தலைவன் கூடியின்புறுவதறியும் பெற்ருேர் சீறி எழுவர் என்பதும் குறிப்பாக உரைத்தனளாம். காவல் கடமைகொண்டு வந்தபோதும், வேங்கையில் ஊசலாடி மகிழும் இயல்பான தன்மையும் உளது என்றது, அவன் ஊச லாட்ட ஆடி மகிழ்ந்ததனை நினைவுபடுத்திக் கூறியதாகும். "தழை அணிந்து' என்றது, அவனல் தரப்பட்ட கையுறையான த்ழையுடையை ஏற்று அணிந்து என்றதாம். ஆடினம்' என்றது, சோலையிலே நின்னோடு விளையாடினம் எனவும், அருவியாடி இன்புற்றனவும் எனவும் குறித்ததாம். பிறிது ஒன்று சுட்டி என்றது. தெய்வம் அணங்கியதாகக் குறித்து, வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்ய முற்பட்டனள் என்றதாம். அளியம்' என்றது, இற்செறிப்பு உணர்த்தியதாம்; உண்மையை உரைக்க வியலாதும், அன்னையின் வெறியாட்டை ஏற்க முடியாதும் அலமரலால், இவ்வாறு கூறியதாகவும் கொள்ள ᏮafᎢᏓᏪᏜ . - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/353&oldid=774470" இலிருந்து மீள்விக்கப்பட்டது