பக்கம்:நற்றிணை-2.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 355 இவ்வாருக, இதுவரை பெய்யாதிருந்த மேகங்கள், இதுகாலை மழை பெய்தலையும் தொடங்கிவிட்டன. ஆதலினலே, ஆராய்ந் தணிந்த கலன்களை அணிபவளான எம் காதலியும், நிழல் விளங்கும் ஒளிவளைகள் நெகிழ்ந்து சோர, ஏங்கியவளாக அழுதலையும் தொடங்கி விட்டனள். அந்த அழுகைக்கு எதிராகக், கோவலரும் மாலைநேரத்திலே வீடு திரும்புவோர், தம்முடைய கொன்றையம் தீங்குழலினை இசைக்கத் தொடங் கினர். இடிமுழக்கம் மிகுதியாகவுடைய இரவுப் போதிலே அவள்தான் யாதாவாளோ? ஆதலின், அவளைக் காக்கும் வண்ணம் யாம் சென்று சேர, விரைந்து தேரினைச் செலுத்து வாயாக என்பதாம். - * . கருத்து : 'இன்றிரவுப் பொழுது தொடங்குவதற்கு முன் பாகவே நாம் ஊர்போய்ச் சேரவேண்டும் என்பதாம். சொற்பொருள் : காயா - கரு நீல வண்ண மலர்களை யுடைய மரம். கொன்றை - சரக்கொன்றை. கரு நீல மலர் நிரம்பிய குன்றின் இடையிடையே சரக்கொன்றை மலர்கள் தோன்றுவது, இருண்ட வானிடையே மின்னல் ஒளிவிட்டுத் தோன்றுவதுபோலத் தோன்றும் என்க. விடரகம் - மலைப் பிளப்பிடம். விளங்க மின்னி விளங்கும்படியாக மின்னலிட்டு: பிளப்பிடம் இருளடர்ந்திருப்பினும், மின்னலால் ஒளிபெற்றுப் புறத்துள்ளார்க்குக் காணப்படும் என்பதாம். மாயோள் - மாமை நிறத்தவள். தேஎம் - நாடு; அவன் வேற்றுநாடு சென் றிருந்தவன் என்பதால், இவ்வாறு அவள் இருந்த தேஎம்' என்று, அவள் இருப்பிடத்தைக் குறிப்பிடுகின்ருன். பாஅய் - பரவி. பெய்யா வானம் - இதுவரை பெய்யாதிருந்த வானம்; பொய்யா வானம் என்பது பாடம் ஆயின், காலத்தே வருதலைப் பொய்த்தலறியாத மேகம் என்று கொள்க. நிழல் திகழ் சுடர்த் தொடி - ஒளியுள்ள வளைகளின்பால் எதிர்ப்படும் பொருள்களின் நிழல் தோன்றும் என்பதாம்; இது தொடியின் சிறப்பினைக் காட்டும். தழங்கு குரல் - முழங்கும் குரல். விளக்கம் : அவன் வே ற் று நாட்டிலிருந்தமையால், இவ்வாறு தன் வீடிருக்கும் தன் நாட்டிடத்துங் கார்காலம் தொடங்கியிருக்கும்; தொடங்கியிருந்தால், அவள் ஏங்கி அழத் தொடங்கிவிடுவாள்; ஆகவே, விரைந்து செல்லுதல் வேண்டும் என்று நினைக்கின்ருன். அழல் தொடங்கினளே, குழல் தொடங் கினரே, என்று உரைப்பது உறுதிபற்றியாகும். அவன் நினை வோட்டத்தில் அவள் நிழலாடிய துயரநிலைமை எனினும் பொருந்தும் தெளிவுபற்றி வந்த கால வழுவமைதி என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/359&oldid=774482" இலிருந்து மீள்விக்கப்பட்டது