பக்கம்:நற்றிணை-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - - 365 கொண்டன பசுமையான தாளினையுடைய செந்தினைப் பயிர்கள். அவற்றை வரையாது கொடுப்பவனின் வள்ளன்மை போலக் கருதி, பலவாகக் கிளையோடும் உண்ணுகின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளிக்கூட்டமே! தலைவன் நம்மோடு உறவாடிப் போயினதன் பின்னர், பின்பு, நம்மை அணங்கு தாக்கி வ்ருத்துவது என்பதும் நிகழும்பேர்லும்! அறநெறியில் நில்லாத அன்ன்ையானவள் எம்மை வருத்தி, க்ாவலின்றி அழிகின்ற தினைப்புனத்திற்குக் காவலின் பொருட்டுச் ச்ெல்வதற்கு விடாதிருத்தலையும் நீவிர் அறிவீர் அல்லவோ! ஆதலின், குல்லை, மலேப்பச்சை, கூதாளி, குவளை, தேற்ரு என்பவற்றின் மலராலே புனைந்த ஈரிய தண்ணிய பூமாலையை உடையவனும், வரிந்து கட்டிய வில்லை உடையவனுமாக, அசோக மரத்தின் அடியிலே எம்பொருட்டாக வந்து நிற்கும், நல்ல தாரணிந்த மார்பனை எம் தலைவனைக் காண்பீரானல், சிறிதளவேனும், அவனுக்கு நன்ருகப் புரி யும் படி யாக எம்முடைய துயரத்தை உரைப்பீராக. கருத்து : இனி அவனை எம்மால் களவிற் கண்டு கூடுதல் இயலாது என்பதாம். சொற்பொருள் : முறஞ்செவியான - முறம்போலும் காது களைக் கொண்ட யானை. தடைஇ - வளைந்து. இறைஞ்சிய - தலைதாழ்ந்த, பைந்தாள் - பசுமையான தாள். செந்தினை - சிவப்புத் தினை. வரையோன் - வரையாது வழங்கும் வள்ளல். பலவுடன் - பலவாக. வளைவாய் - வளைந்த வாயினையுடைய. ஈர்ந்தண் கண்ணி - ஈரிய தண்ணிய தலைமாலை. சுற்றமை வில் - வரிந்து கட்டிய வில். செயலை - அசோகு. சிறிய . சிறிதளவு. அவற்கு நன்கு அறிய - அவனுக்கு நன்ருகப் புலப்ப்டுமாறு. அணங்கு - தெய்வம், அறனில்யாய் அறமற்ற தாய்: அறமற்ற வளானது, கன்னியர் காதல் கொள்வது அறமே என்பதை ஆன்ருேர் வாக்காலும், தன் அநுபவத்தாலும் அறிந்திருந்தும் அதற்கு மாருனவே கருதும் தாய் என்பதால். வறும்புனம் - காவலிழந்துபோன புனம். விளக்கம்': செந்தினைக் கதிர்களை வள்ளலின் கொடை போலக் கருதிக் கிளியினம் தம் கூட்டத்தோடு கவர்ந்து உண்ணும் என்றது. அவ்வாறே தலைவியை இதுகாறும் தலைவன் தன் விருப்பம்போல் களவிலே இன்புற்றனன்; இனி அதுதான் இயலாது என்றதாம். சிறிய அவற்கு நன்கு அறிய உரைமின்!” என்றது, சிறிதளவேனும் எம் நிலையை அவன் நன்கு புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/369&oldid=774507" இலிருந்து மீள்விக்கப்பட்டது