பக்கம்:நற்றிணை-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின் தெளிவுரை 31 - சொல்லப்படுவதாகும். நீதரன் அதனை இல்லாதானும் ஆயினமையின், நின்பால் எதனையும் கூறிப் பயன்iன்று காண். சொற்பொருள். அரிகால்-பயிர் அறுத்துவிட்ட பின்னுள்ள தாளடி நிலம். மறுகால் உழுதல் - மீளத் தாளடிப் பயிர் செய்யக் கருதி உழுதல். செறு-சேறு. வட்டி-வட்டமான கடகப்பெட்டி. பற்பல மீன். வயலில் கலித்துப் பெருகி யிருந்த பல்வகையான மீன்கள். யாணர். புதுவருவாய். நெடிய மொழிதல் தன் பெருமிதம் புலப்படக் கூறுதலும் ஆம். ஆடிய - விரையச் செல்வன ; அவை மாவும் தேரும் களிரும் போல்வன. சான்ருேர். சான்ருண்மையாளராகிய மறமாண்பினர். புன்கண் - துயரம். மென்கண்-இனிதான செயல்கள் செய்யும் தன்மை. • , உள்ளுறைபொருள் : தாளடியிலே விதைப்பதற்கு விதை யோடுஞ் சென்ற பெட்டியானது, மீனெடும் திரும்பும் என்றனள். இது தலைவியோடு இல்லறம் நிகழ்த்தும் நின் பால், அதன் ப்யனைச் செறிவுடன் பெறுவதற்குரிய மனநிலை யில்லாதே, பரத்தையர்பாற் பெற லா கு ம் இழிந்த இன்பத்தினை நாடும் புல்லிய ஒழுக்கம் உண்டாயிருக்கிறது எனக் கடிந்து கூறியதாம். . விளக்கம்: தலைவியை நெற்பயனுக்கும், பரத்தையை மீன்பயனுக்கும் உவமித்தனள். குலமகளிர்போலக் குலமரபு பேணும் மகப்பெற்றுத் தருவதற்குப் பரத்தையர் உரிமை யற்ருர். ஆதலின், அவர் உறவு இழிந்ததாயிற்று என்று கொள்க. இவ்வாறு தோழியாற் கடிந்து கூறப்பெற்ற தலைவன், தன் செயலுக்கு நாணி நிற்க, அதுகண்டு இரங்கிய தோழி, அவனுக்கு உதவக் கருதித் தலைவியை இசைவிக்க முற்படுவாள் என்பதாம். புன்கண் - வருத்தம் ; மென்கண்- அருள். நெடிய மொழிதல் - ஆண்மையான பேச்சுப் பேசுதல் எனினும் ஆம். செய்யானது நெல்விளைத்துப் பயன் கொள்ளுதலுக்கு உரியது; அதனிடைய மீன் கலித்துப் பெருகுதல் இடைவரவே யாகும். இவ்வாறே தலைவனுக்கு உரியவள் மனைவி எனவும், இட்ைவரவேபோல வந்தவள் பரத்தை என்பதும் கொள்க. . . . - உரிமை கடமையோடு இன்பமும் தருபவள் மனைவி என்பதும், இன்பமாகிய ஒன்ருன் மட்டுமே தலைவனைக் பவள் பரத்தை என்பதும் கருதுக, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/37&oldid=774509" இலிருந்து மீள்விக்கப்பட்டது