பக்கம்:நற்றிணை-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை --- 379 பெற்ற, அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை அணித்தாக ஈன்றிருந்தது பெண்புலி யொன்று. வயாநோய் பொருந்திய அந்தக் கரிய பெண்புலியானது பசியாலே வருந்தியதாக, அதனையறிந்த வலியுள்ள ஆண்புலியானது இரைதேடிவரப் புறப்பட்டது. புள்ளிகளையுடைய முகம் சிதையுமாறு தாக்கி, ஒரு களிற்றைக் கொன்று வீழ்த்தியது. அப்படி வீழ்த்திய அது, டியினும் காட்டில் உரத்த குரலோடு முழக்கமிட்டபடி யிருக்கும் அச்சமிகுந்த நடு இரவு நேரத்திலே, செறிந்த இருளானது மூடிமறைத்திருக்கும் அச்சம் வருதலையுடைய வழியிலே, பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லும் இடியும் இடிக்கும்போதிலே, நீயும் வருகின்றன! அதேைல, எங்கள் கவலையே மிகுவதனால், நீயும் எங்கள்பால் அருள் உள்ளவன் அல்லை காண்! கருத்து : இரவு நேரத்தில் இனி வருதல் வேண்டா' என்பதாம். - சொற்பொருள் : கல் - மலை. அயல் - அடுத்துள்ள பக்கத் திலே. க்லித்த - தழைத்த அலங்கல் - அசைதல். தொடலை . மாலை. குருளை - குட்டி. வய - வயாநோய் ஈன்ற தாய்க்குச் சிலநாள்வரை உள்ள சோர்வும் நோயும். புனிறு - ஈன்றதன் அணிம்ை. பிண - பெண்புலி. வயம் - வலிமை. புகர் - புள்ளி. உரறும் - முழக்கும். உட்கு - அச்சம். நடுநாள் - நள்ளிரவு. கனையிருள் - மிகுதியான செறிந்த இருள். இயவு - வழி. உரும் . இடி. உடன்று - சினந்து. இரிக்கும் - கொல்லும். ஓங்கு வரை - உயர்ந்த மலை. . . விளக்கம் : அருளினை போலினும் என்றது, அவன் அவ்வாறு நினைத்தாலும், அவன் வரும் வழியினை நினைந்து வருந்தும் அவர்களுக்கு, அஃது அருளாகாது துயராகவே விளங்குகின்றது என்றதாம். நெறியின் ஏதங்கூறி இரவுக் குறி மறுத்தலால் இது வரைவு வேட்டலும் ஆயிற்று. இறைச்சி பெண்புலி பசியுற்றதென்று, ஆ ண் புலி களிற்றைக் கொன்று அதனை உண்பிக்கும் என்றது, அவ்வாறே நீயும் நின் காதலியின் துயரத்தை நினைந்து, உரிய வரைபொரு ளோடு வந்து மணந்து கொள்ளவேண்டும் என்பதாம். களிற்றைக் கொன்று இரைபெற்ற புலியானது, அந்த வெற்றிக் களிப்பால் காடே அதிரும்படி முழங்கும் என்றது, அவ்வாறே நீயும் வரைவொடு வரும்போது, இன்னியங்களின் முழக்கோடு ஊரறிய வரலாம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/383&oldid=774537" இலிருந்து மீள்விக்கப்பட்டது