பக்கம்:நற்றிணை-2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை 389 படகினையுடைய பரதவர்கள், வலிமையான புரிகளைக் கொண்ட கயிற்றின் நுனியிலே கட்டிய, பெருமீன்களை எறிந்து கொல்லும் உளியினைக் கைக்கொண்டவர்களாக, ஒள்ளிய விளக்கங்களைக் கொளுத்திக்கொண்டு, நள்ளிரவுப் போதிலே மீன்வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று, வைகறை வேளையிலே கடலிற் பிடித்த மீன்களைக் கொண்டு வந்து, கானற் சோலையிடத்தே அவற்றைக் குவித்து வைத்துவிட்டு, உயர்ந்த கரிய புன்ன்ை மரங்களின் வரிப்பட்ட நிழலிலே அமர்ந்திருந்த வராக, தேன் மணம் கமழ்கின்ற கள்ளினைத் தம் சுற்றத் தோடும் சேர்ந்திருந்து நிறையக் குடித்து, பெரிதாக மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய துறையை உடையவன் தலைவன்! அவன், எம் சிறிய நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் நீங்கி அறியான்! ஆகவே, என் நல்ல நெற்றிக்குப் பசலைநோய் என்பதும் எப்படி உண்டாகும்? அது தான் உண்டாகாதுகாண் என்பதாம். கருத்து : 'அவன் நெஞ்சிலே நிற்பதால் யான் பிரிவை நினைந்து வருந்திலேன்' என்பதாம். . . சொற்பொருள் : நோன்புரி - வலிமிக்க புரி, வலிய புரிகளை - மூன்றும் ஐந்துமாகச் சேர்த்து முறுக்கிய கயிறு என்பார் நோன்புரிக் கயிறு என்றனர். யாத்த - கட்டிய, கடுநடை - கடுமையான வேகம். எறி உளி - எறியும் உளி. கடுநடை எறி உளி எனக்கொண்டு, கடுவேகத்துடன் பெருமீன்கள் மேல் எறிந்து கொல்லும் உளி எனவும் கொள்ளலாம். திமில் - மீன்பிடி படகு. வைகறை - விடியல். குவைஇ - குவித்து. வரிநிழல் - வரிப்பட்ட நிழல். கிளை - சுற்றம்; ஏவற்சுற்றம் என்றலும் பொருந்தும். பெரிய மகிழும் . பெரிதான மகிழ்ச்சி கொள்ளும். உள்ளுறை : பரதவர் எறி உளியும் விளக்கமும் கொண்டு நள்ளிரவிலே கடல்வேட்டத்திற்குச் சென்று, வைகறையில் மீன் கொள்ளையோடு வந்து, மீன்களைக் கானலிலே குவித்து விட்டுப், புன்னை நிழலிலே சுற்றத்தோடு அமர்ந்து கள்ளைக் குடித்துப் பெரிதாகக் களித்திருக்கும் துறைவன் என்றனள். தலைவனும், அவ்வாறே வரை பொருளுக்குச் சென்று, பொருள் தேடியவகை வந்து, அப்பொருளைத் தலைமகள் வீட்டு முற்றத்திலே குவித்துத், தமர் இசைவோடு தலைவியை மணந்து கொண்டு காமக் களிப்பிலே பெரிதாக இன்புற்றுக் களிப் பவனுவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/393&oldid=774558" இலிருந்து மீள்விக்கப்பட்டது