பக்கம்:நற்றிணை-2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நற்றிணை தெளிவுரை தொழுது போற்றச், செவ்விதான இடத்தையுடைய வானத் திடத்தே விரைவ்ாகத் தோன்றி, என்க்குத் துன்பந் தருவதாக வும் பிறந்து விட்டது. களிருனது, தன்னுடைய வருந்திய நடை யினையுடை இளையபிடியின் வருத்தத்தைத் தாங்கமாட்டாதாய், உயரமாக வளர்ந்துள்ள யாமரத்தை வீழுமாறு குத்தி, அதன் வெண்மையான நாரை உறித்துக்கொண்டும் நீரைப் பெரு தாய், அத் துன்பத்தால் வருந்தியபடி தன் கையைச் சுவைத்த படியே அண்ணுந்து நின்று, வருந்துதலைக் கொண்ட நெஞ்சத் தோடு முழக்கமிடும். கடத்தற்கு அரிதான அத்தகைய வழியூடே நாம் அழவழப் பிரிந்து சென்ருேரான அவர்தாம், நம்மை முற்றவும் மறந்தே போயினரோ? என்பதாம். கருத்து : அவர் மறந்தால் யான் தாளேன் என்பதாம். சொற்பொருள் : வளை - கைவளை. செவ்வாய் - செவ்விய இடத்தையுட்ைய. ஐ என - திடுமென விரைவாக. உயங்கு நடை - வருந்தித் தளர்ந்த நடை. யாஅம் - யாமரம்; இதன் பட்டை ஓரளவு நீர் வேட்கை போக்கும் என்பர். அழங்கல் . வருந்துதல் கொண்ட, விளக்கம் : வானத்தெழுந்த பிறை நிலவு, அவள் பெருகிய துயரத்தை மேலும் கனன்று எரியச் செய்ய அவள் துயரத்தால் வெதும்பினள் என்பதாம். களிறு தன் பிடியின் துயரத்தைப் பார்த்துத் தாங்காமல் யாமரத்தின் பட்டையை உரிந்துத் தர முயன்றும், அதுவும் நீர்ப்பசையற்றுத் தோன்றக் கண்டு வருந்திக் கைசுவைத்து அண்ணுந்து முழக்கமிடும் வழி யென்றது, வழியின் பாலைத் தன்மையைக் காட்டுவதாகும். பலர் தொழத் தோன்றும் நிலவு எனக்குமட்டும் துயரமாவது போலப், பலரும் பாராட்டும் பொருட்டுப் பொருள்தேடி வந்து அறமாற்றப் பிரிந்த அவர் செயல்தான், எனக்குமட்டும் துன்ப மாகின்றது என்று சொல்லி அவள் நலிகின்றனள் எனலாம். பிடியைப் பேணக் களிறு துடிக்கின்ற காட்டுவழி செல்பவரா யிருந்தும், அவர்பால் அவ்வாறே நம்துயரைப் பேர்க்கவேண்டும் என்னும் நினைவு தோன்ருததேன் என்று நினைந்தும் வாடு கின்ருள் அவள் என்க. - பயன்: இதல்ை, மேலும் சிலகாலம் பொறுத்திருந்து, அவன் வந்ததும், அவள், தன் துயரம் தீர்வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/420&oldid=774621" இலிருந்து மீள்விக்கப்பட்டது