பக்கம்:நற்றிணை-2.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு-2 தொல்காப்பியப் பொருளதிகாரம் களவியல் உரையுள், நச்சிஞர்க்கினியர் எடுத்துக் காட்டும் செய்யுள் (தொல். பொருள், களவு 23) ஒன்று நற்றிணைப் போக்கில், பத்தடியள வில் அமைந்துள்ளது. அதுவ்ே காணுமற்போன பாட்டாகக் கொள்ளலாம் என்பர் சிலர். அது வருமாறு : 'நெருகலும் முன்னுள் எல்லையும் ஒருசிறை புதுவை யாகலின் கிளத்தல் நாணி நேரிறை வளைத்தோள் கின்தோழி செய்த ஆருயிர் வருத்தம் களையா யோ! என, எற்குறை உறுதிர் ஆயின், சொற்குறை 5 எம்பதற் தெளியள் அல்லள்; எமக்கோர் கட்காண் கடவுள் அல்லளோ-பெரும! ஆய்கோல் மிளகின் அமலையம் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புறம் தைவரும் மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே! தெளிவுரை பெருமானே! ஆய்ந்தெடுத்த கோல்போல நேரிதாகப் படர்ந்து செல்லும் மிளகினது வளமான செழித்த கொடியானது, தூங்கிக் கொண்டிருக்கும் புலியினது கோடுகள் அமைந்த மேற்புறத்தைத் தடவிவிடும், மேகங்கள் சூழ்ந்த கருமணி போன்ற மலைநாட்டு மன்னவனின் மகள் அவள். அவள்தான் எம்போலும் தகுதியுடையார் அணுகி வசப்படுத்து வதற்கு எளிமையானவளே அல்லள். எமக்கெல்லாம் கண்ணெதிரே காண்கின்றதற்குரிய ஒரு கடவுள் போல்வாளும் அவளாவாள் அல்லவோ ஆகவே நேற்றும், அதற்கு முதல் நாள் பகல் வேளையிலும், ஒரு பக்கமாக வந்து நின்ற நீதான், இவ்விடத்துக்குப் புதியவன் ஆதலினலே, நின் கருத்தை எடுத்துச் சொல்லுவதற்கு நாணினையாய்த் திரும்பிச் சென்று. இன்று நேரான முன்னங்க்ைகளையும் வளையணிந்த தோளினையும் உடையவளான நின் தோழியாவாள் செய்த, என் அரிய உயிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/421&oldid=774622" இலிருந்து மீள்விக்கப்பட்டது