பக்கம்:நற்றிணை-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நற்றிணை தெளிவுரை மாறு கூறினர். கார்மேகங்கள் திரண்டு மொய்த்திருக்கின்ற வெற்புக்களைக் கொண்ட மலைகள் பலவற்றையும் கடந்து, பொருளைச் செய்து கொணர்வதற்கும் சென்றனர். அவர் தாம், தாம் சென்றிருக்கின்ற தேயத்திடத்தும், "என் தோள்களிலே விளங்கிய தோள்வளைகள் நெகிழும்படியாகச் செய்ததனலே ஆகிய பிரிவுக்கலக்கமாகிய துன்பத்தை நோக்கி, எள்ளி நகையாடுவதுபோல மின்னலிட்டு ஆரவாரித்தபடி தோன்றியுள்ள இக் கார்ப் பெயலின் இடிக்குரலைத் தாமும் கேட்டிருக்க மாட்டாரோ?” சொற்பொருள் : இசை-புகழ். இன்பம்-தலைவியோடு கூடிவாழ்ந்து பெறுதலாகிய இன்பம். ஈதல்.வறுமை யாளராய் வந்து இரந்தவர்க்கு வழங்கி மகிழ்தலாகிய இன்பமும், அந்தச் செயலாலே விளைகின்றதாகிய மறுமை இன்பமும். அலரி-விரிந்த பூ. மணி-நீலமணி. கதுப்பு-கூந்தல், வஞ்சினம்.சபதம். செயிர்-குற்றம். கலக்குஅஞர்-கலக்கந் தருவதான பிரிவுத் துயரம். கார்ப்பெயல்-கார் காலத்துப் பெயலாகிய பெருமழை. விளக்கம் : பல் தெரியக் காட்டி நகுதலின்போது உண்டாகும் ஆரவாரத்திற்கு இடிக்குரலையும், பல்லொளிக்கு மின்னலையும் நயமாக உவமித்தனர். கேளார் கொல்லோ!' என்றது, கேட்டனராயின், சொற்பிழையாராகிய அவர் தாம் இதற்குள் மீண்டும் வந்திருப்பாரே எனக் கருதும் ஆற்ருமை மிகுதியாற் கூறியதாகும். தேயந்தோறும் பருவங்களும் வேறுபடுதலினலே, அவர் .ெ ச ன் று ள் ள நாட்டிடத்தே இக் கார்ப்பருவமானது இன்னும் தோன்றிற் றில்லை போலும் என்று மனந்தேறுவதற்கு முயன்றதாம். வஞ்சினம் பொய்த்தார் என்று அவருக்குத் தெய்வக்கேடு சூழாமை கருதுவாள், தன் அருளுடைமையாலே இவ்வாறு கூறுகின்றனள் என்க. இதுபற்றியே செயிர்தீர் காதலர்’ என, அவர் வஞ்சினம் பொய்த்தல் இலர் என்று கூறினளாம். நெஞ்சு உணக் கூறுதலாவது, நெஞ்சமும் ஏற்றுத் தெளிவு கொள்ளுமாறு உறுதிச் சொற்களால் தெளிவு கூறுதல். தெய்வம் அஞ்சல், அழுகையாகிய மெய்ப் பாடுகளும், அயாவுயிர்த்தல் பய்னும் இதற்குக் கொள்ளப் படும். இசையும் இன்பமும் ஈதலும் என்னும் மூவகை அறங் களும் இதன்கண் கூறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/46&oldid=774708" இலிருந்து மீள்விக்கப்பட்டது