பக்கம்:நற்றிணை-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை - 65 நாடாளும் மன்னர்கள் முற்றவும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இவற்றை நீயும் அறிவாய் அல்லவோ! நாம், அவர் நம்பால் கொண்டுள்ள அன்பினது தகைமையி ேைலயே உயிர் வாழ்கின்ருேம் ஆதலினலே, "தாம் செய்யும் பொருளினது அளவும் அதேைல அடையவிருக்கும் பயனும் பற்றித் தெளிவாக நம் காதல ராகிய அவரும் அறியாராயினர்: பொருளிட்டுதல் ஒன்றே செயத்தக்கதாவது என்று தாம் அதன்பால் மனநெகிழ்ச்சி பெரிதும் உடையராயினர்; வெயிலானது நிலைகொள்ளு தலாலே நெடிதுபட்டுக், கோடையின் வெம்மையில் அழ கிழந்த சுரத்தின் வழியும் பிற்பட்டு ஒழியுமாறு, அதனையும் கடந்து, அதற்கு அப்பாலுள்ள நாட்டிற்கும் அவர் சென் றனர். எக்காலத்திலும் ஆடவரது நிலைமை இப்படிப் பட்டதே என்பார்கள் உல்கத்தார். இதனை இவ்வுலகி னிடத்து யாவருமே அறிவர் கண்டாய். எனவே, யானும் அவர் மீண்டுவரும் வரையும் பொறுத்திருப்பேன் என்று அறிவாயாக. சொற்பொருள் : மரம்' என்றது மருந்துப் பயனுள்ள மரத்தை. உரம்-உள்ள வலிமை. வளம்-வளமை. கசிந்துநெகிழ்ந்து. என்றுாழ்-வெயிலின் வெம்மை. ஒழிய-பிற் பட்டுப் போக, அஃதாவது அதனைக் கடந்து. என்னேரும்: எல்லாரும். - விளக்கம் : 'பொருள் ஈட்டி வருவது இன்பநுகர்வின் பொருட்டாகவே அன்ருே ஆயின், அதற்கு இன்றியமை யாதேமாகிய யாம், அவர் பிரிவாலே நலிவுற்று அழிந்தபின் அதுதான் வாய்ப்பதாகுமோ? என்னை இவ்வாறு நலியச் செய்துட்டு எந்த இன்ப நுகர்ச்சியை விரும்பிப் பொரு ளிட்டச் சென்றனரோ, நம் காதலர்?' என்று உவமை களால் தன் நிலையையும், தன்னைப் பிரிந்த தலைவனின் தன்மையையும் தலைவி விளக்குகின்ருள். - பின்னும் மருந்து கொள்ளக் கருதி, மருந்து மரத்தை மாந்தர் முற்றவும் சிதைத்துக் கொள்ளார்; வலிமை பெற்று மீளவும் உயர்தவத்தைத் தொடரக் கருதியே வலிமை இழந்தபோது அத்னைக் கைவிடுவர்; மீண்டும் வரிவிாங்கும் பயனைப் பெறக் கருதியே அரசரும் தமக்குரிய இறையை அளவோடு பெறுவர்; இதுதான் உலக இயல்பு. தமக்கு நிலை யூாகப் பயன்படுவதான ஒன்றை எவருமே முற்றவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/69&oldid=774758" இலிருந்து மீள்விக்கப்பட்டது