நலமே நமது பலம் 1 O5
12. விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவும் முறைகள்
விபத்துக்கு ஆளானவர்களுக்கு, விபத்து நடந்த இடத்திலேயே உதவ முற்படுவதற்குப் பெயர்தான் முதல் உதவி என்பதாகும்.
வாகன விபத்தாக இருக்கலாம்; வழி நடையின்போது தெரியாமல் ஏற்படுகிற உடல் நலிவுகளால், உண்டாகும் சுகவீனங்களால் ஏற்பட்டதாக இருக்கலாம்.
தகுந்த நேரத்தில், பொருத்தமான முதல் உதவியின் மூலமாக, காயம் பட்டவர்களைக் காப்பாற்றி விடலாம். ஆனால், அதிக இரத்தப்போக்கு ஆகிறபோது, சுவாசம் தடைப்பட்டு தள்ளாடுகிறபோது, அல்லது விஷத்தால் ஏற்படுகிறபோது, மோசமான விளைவுகளின்போது, முதல் உதவியாளர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியது
மிகமிக முக்கியமாகும்.
முதல் உதவியானது, விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு, ஒருவிதமான நல்ல நம்பிக்கை ஊட்டுவதாக அமையும். உடலில் ஏற்படுகிற உபத்திரவங்கள் குறைவது போன்ற உணர்வும் தோன்றும். தான் பிழைத்து விடுவோம் என்ற எண்ணம் ஏற்படுகிறபோதே. உடலுக்குத் தெம்பும் மனதுக்குள் ஒருவித வலிமையும் வளர்ந்து கொள்ளும்.
சில முக்கிய குறிப்புகள்:
1. விபத்து ஏற்பட்ட இடத்தில் நீங்கள் நிற்கின்றீர்கள்
என்று வைத்துக் கொள்வோம். விபத்து ஏற்படுகிற
சூழ்நிலையை நீங்கள் நன்றாக அலசிப் பார்த்து ஆய்வு செய்து