பக்கம்:நலமே நமது பலம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

4. நீந்தும் போது மேற்கொள்ளும் ஒழுங்கு முறைகள்:

1. நீச்சல் குளத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லைக்குள்ளே தான் நீந்த வேண்டும்.

2. தனியே போய் நீந்துவதைத் தவிர்த்து, துணையாகப் போய்தான் நீந்த வேண்டும்.

3. அரை குறை நீச்சல் பயிற்சி உள்ளவர்கள், ஆழமற்ற நீர்ப் பகுதியில் தான் எப்பொழுதும் நீந்த வேண்டும்.

4. நீந்திக் கொண்டிருக்கும்போது தண்ணிரில் யாரும் எச்சில் உமிழவோ, மூக்குச் சிந்தவோ, காறி உமிழவோ கூடாது. அதற்கென்று குளத்தின் ஓரங்களில் அமைக்கப் பட்டிருக்கும் அழுக்கு நீர்ச்சாக்கடைகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

5. வசதியும் வாய்ப்பும் இருந்தால், நீந்துவோர் தம் தலைக்கு நீச்சல் குல்லாய் அணிந்து கொள்வது நல்லது.

6. நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுகின்ற அறிவுரையின் படி தான் நீந்த வேண்டும்.

7. நீச்சல் குளத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் முரட்டுத் தனமாக அமுக்கிக் கொண்டோ, சண்டை போட்டுக் கொள்வது போலவோ விளையாடக்கூடாது.

8. மூச்சுத் திணறும் வரையில் தண்ணிரை முகத்தில் அடித்துக் கொள்வது கூடாது.

9. பயிற்சியாளர்களும் பாதுகாப்பாளர்களும் கவனமாக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வீண் பேச்சுச் கொடுத்துக் கொண்டு அவர்கள் கவனத்தைத் திசை . திருப்பக்கூடாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/228&oldid=691045" இலிருந்து மீள்விக்கப்பட்டது