நலமே நமது பலம் 227
10. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தண்ணிரில் நீந்திக் கொண்டு இருக்கக்கூடாது.
5. நீந்திமுடிந்தவுடன்: * 1. நீந்தி முடித்து நீச்சல் குளத்தை விட்டு வெளியேறி வந்தவுடன், முன்னர் குளித்த நீர்த்தாரைகளில் மீண்டும் நீராடி, தன் மேல் படிந்துள்ள பாசகம் போன்ற பொருட்களால் நிகழும் எரிச்சல் போன்ற தன்மையை நீக்கிய பிறகே, உரிய ஆடையை அணிய வேண்டும்.
2. ஆடை அணிவதற்கென்று உள்ள அறைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், உள்ளே விணே காலம் கழிக்காமல், சீவி சிங்காரம் செய்யாமல் விரைந்து வெளியே வர வேண்டும்.
நீச்சல் ஒரு பயன் மிகுந்த பொழுது போக்காகும். அதில் விபத்து நேருகின்றதென்றால், அது நமது அறியாமையாலும், அவசரப் புத்தியினாலும், அலட்சியப் போக்கினாலும் மட்டுமே நிகழ்வதாகும்.
6. நீச்சல் விபத்தும் முதலுதவியும்:
நீரில் மூழ்கியவர்களுக்குச் சுவாசம் விடுவது இழுப்பது எல்லாம் மிகவும் கஷ்டமாகவே இருக்கும். அந்த நேரத்தில், செயற்கை சுவாசத்தின் மூலம் உதவி செய்வதால் இயற்கையான இயக்கம் பெறும் வரை இதமாக இருக்கும்.
அந்த வகையில் செயற்கைச் சுவாச முறையினை 2-பிரிவாக விளக்கிக் கூறுவார்கள்.
• 1. sumuij&G5 sumui (p6ρ (Mouth to Mouth).
2. முதுகுப்புறம் அழுத்திவிடும் முறை (Back Pressure Hip Lift).