பக்கம்:நலமே நமது பலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

டாக்டர். எஸ். நவராத செல்லையா

g

பிளேக் நோய் ஏற்பட்டு விட்டால் அந்த வட்டாரத்தை விட்டே நீங்கி வேறு இடத்திற்குக் குடி பெயர. வேண்டும்.

எலிகளும் கொள்ளைக் கிருமிகளும் தொடாதவாறு உணவுப் பண்டங்களை மூடிக் காக்க வேண்டும். பால், உணவு வகைகள் எலிகளுக்குக் கிடைக்காதவாறு பத்திரப்படுத்திட வேண்டும்.

பிளேக் நோய்க்கு எதிர் மாற்று ஊசிமருந்தை (Anti Plague inoculation) 6T6060135T logo (SIBob GLT (Bl கொள்ளவேண்டும்.

பிளேக் நோய் பரவுகிற காலத்தில் கிருமிகள் கால்களில் கடிக்காதவாறு காலுறைகளை (Stockings) அணிவது நல்லது.

பொதுமக்கள் பொது இடத்தில் கூடுவதை உடனடி

யாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பள்ளி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்கள் போன்றவைகளை உடனடியாக மூடச் செய்தல் வேண்டும்.

பிளேக் நோய்க்கு ஆளான நோயாளிகளைத் தனிமைப் படுத்தி, அவர்களுக்காக ஓரிடத்தை ஒதுக்கி மற்றவர் களுக்கும் பரவாமல் பார்த்துக் கொள்வது நோய் பரவாமல் தடுத்துவிட உதவும். .

3. வாந்தி பேதி நோய் (cholera).

காலரா என்று கூறப்படுகின்ற கொடிய நோயானது, மிக

விரைவில் ஆயிரமாயிரம் உயிர்களைப் பலி கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/40&oldid=693195" இலிருந்து மீள்விக்கப்பட்டது