நலமே நமது பலம் 77
5. மருந்து கொடுத்த பிறகு ஓய்வெடுக்கச் செய்வதும்
நல்லது. -
7.2. தீக்காயமும் வெம் புண்ணும் (Burns and
Scalds):
அமிலங்களால், நெருப்பினால், மின்சாரத்தினால்
அல்லது சூடான இரும்பினால் ஏற்படுவது தீக்காயமாகும்.
கொதிக்கும் தண்ணtர், சூடான பால், கொதிக்கும்
எண்ணெய் இவற்றால் ஏற்படுவது வெம்புண் ஆகும்.
அறிகுறிகள்:
1. தோல் சிவந்து காணப்படும்.
2. தீக் காயத்தால் திசுக்கள் எரிந்தும் சிதைந்தும்
போயிருக்கும்.
3. கடுமையான வலியும் இருக்கும்.
இந்த அதிர்ச்சியால் மயக்கமும் ஏற்படும். காயத்தால் காயம்பட்ட இடம் அழுகிப் போயிருக்கிற போது வேதனை மிகவும் அதிகமாகி இருக்கும்.
6. தீக்காயத்தினால் ஆடை தேகத்தோடு ஒட்டிக் கொள்ளும். அதனைப் பிரிக்கவோ இழுக்கவோ முயற்சிக்கக்கூடாது.
முதலுதவிமுறை: 1. அமிலத்தால் ஏற்பட்ட காயத்தைக் கழுவுவதற்கு
நச்சுத் தடை கலந்த பஞ்சினைப் பயன்படுத்த வேண்டும்.
2. பர்னால் அல்லது போரிக் ஆயின் மென்ட் போன்ற
மருந்தைக் காயத்தின் மேல் தடவலாம்.