பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சீத பேதிக்கு இளம் மாதுளைப் பிஞ்சைச் சாப்பிட்டால் சீத பேதி யைக் கேட்கும். -

வயிற்றுப் புண் தீர வாழைப் பூவைத் துவரம் பருப்புச் சேர்த்து சமையல் பதார்த்தமாகச் சாப்பிடப் புண் நீங்கும். எரிச்சல் தீரும். ஆண்மை விருத்தியாகும்.

மந்தம் போக கறிவேப்பிலைப் பொடியுடன் கொஞ்சம் மிளகு, சீரகம், உப்பு, சுக்கு ஆகியவற்றைப் பொடி செய்து பசு கெய் கலந்து உணவு கொண்டால் மந்தம் நீங்கும்.

வாய்ப் புண் நீங்க மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சமையலில் கலந்து சாப்பிடலாம். தேங்காய்ப் பால் சாதம் சாப்பிட லாம். ... " -

- நரம்புத் தளர்ச்சிக்கு

விளாம் பிசின் கால் தோலா எடுத்து ஒரு சேர் பசும் பாலில் ஊறவைத்து ஒரு கரண்டி தேன் சேர்த்துப் பருக வேண்டியது. உடல் வலிவுககும் இது நல்லது.

அரணைக் கடிக்கு -

- - சிறு குறிஞ்சான் இலையை அரைத்து ೯.ಅ அரணே கடித்ததோ அதன் கடிவாயிற் பூசவேண்டும். கொஞ்சம் இலையை உண்ணுதலும் நலம். -