பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அல்லாஹ் அவருக்குப் பாடம் கற்பித்துவிடுவான்!” என்று சொல்லி, அவனைச் சமாதானப்படுத்தினான். பிறகு, அவன் அங்கிருந்து எழுந்து சென்று, கொஞ்சம் சூப்புத் தயாரித்துக் கொண்டு வந்து, அபு ஸிர் அதைக் குடிக்கும்படி செய்தான்.

  இரண்டு மாத காலம், அவன் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, அபு ஸிர்ருக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்து வந்தான். அதன் பின்பு, ஆண்டவன் கருணையால், அபு வலி முற்றும் குணமாகி எழுந்திருந்தான். அப்பொழுது அவன் வேலையாளைப் பார்த்து, "எல்லாம் வல்ல இறைவன் என்னை நல்ல நிலைமையில் வைத்தவுடன், நீ செய்த உதவிக்காக உனக்குக் கைம்மாறு செய்யத் தவற மாட்டேன்! ஆனால், எல்லாவற்றிற்கும் மேலே அருள் பொழிபவன் ஆண்டவன் ஒருவனே! ஆண்டவன் உனக்கு எல்லா நன்மைகளையும் அளிப் பானாக!" என்று கூறினான். அதைக் கேட்ட வேலையாள்," நீர் குணமடைந்ததற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி செலுத்து கிறேன்!நான் உமக்காக எதுவும் செய்யவில்லை: அருளாளனான அல்லாஹ்வுக்காகவே என் கடமையைச் செய்தேன்!”