பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


-வரை மனம் இரங்கி இவனை விட்டுவிட்டேன். இவன் திருடிய துணிகளின் கிரயத்தை நான் என் கையிலிருந்து வாடிக்கைக் காரர்களுக்குக் கொடுத்துவந்தேன். இவனுக்கும் நயமாக எவ்வளவோ புத்திமதி சொன்னேன். நான் சொன்னது எதுவும் இவன் செவியில் ஏறவில்லை. இனியும் இவன் வந்தால், சுல்தானிடம் தள்ளிவிட்டுவிடுவேன். அவர் இவனுக்கு மரண தண்டனை விதிப்பார். அத்துடன் உலகில் ஓர் அயோக்கியன் குறைந்தான் என்றாகும்!'. உடனே சுற்றியிருந்தவர் பலரும் மருத்துவனை வாய்க்கு வந்தபடி ஏசத் தொடங்கினர்.