பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41

அவன் குதிரை மேல் ஏறிக்கொண்டு, நேரே தன் வீட்டுக்குச் செல்லாமல், அரண்மனை நோக்கிச் சென்றான். அங்கே அவன் அரசரைக் கண்டு வணங்கி, “நான் தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்வதற்காகவே அவசரமாக வந்துள்ளேன்!" என்று கூறினான். "என்ன எச்சரிக்கை?" “தாங்கள் ஒரு ஹம்மாம் கட்டி வைத்திருக்கிறீர்கள் அல்லவா?" "ஆம், வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒரு நல்ல மனித னுக்காக அதைக் கட்டிக் கொடுத்தேன்! உனக்குச் சாயத் தொழிற்சாலை கட்டிக் கொடுத்தது போலவே, அவனுக்கும் உதவி செய்தேன். அவனுடைய ஹம்மாம் இந்த நகருக்கே அணிகலமாக விளங்குகின்றது!" “தாங்கள் அதன் உள்ளே சென்றிருக்கிறீர்களா?" "ஆம்."