பக்கம்:நல்ல எறும்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குள் அந்த எறும்பு அவ் வகுப்பு முழுவதும் சுற்றி வந்தது. அப்போது ஒரு சிறுவன் காலை ஆட்டிக்கொண்டு இருந்தான். அன்றியும் அவன் பாடத்தைச் சிறிதும் கவனிக்கவே இல்லை. ஆதலால் அந்த எறும்பு அவனையும் ‘ வெடுக் ’ கென்று கடித்துவிட்டு வேகமாய் ஒடிப்போய் விட்டது.



6

பிறகு அவ்வெறும்பு அடுத்த வகுப்பை அடைந்தது. கோவிந்தன் அந்த வகுப்பிலேதான் வாசிக்கிறான். ஆதலால் அந்த எறும்பு அவனைப் பார்த்துச் செல்லவே அங்கு வந்தது.

அது வகுப்புக்குள் நுழைந்து சிறிது தரரம் சென்றது. அங்கே ஒருவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் ; மற்றொருவன் வேறு வேலை செய்து கொண்டு இருந்தான் ; வேறு ஒருவன் அடுத்த சிறுவனோடு பேசிக்கொண்டு இருந்தான். இவர்களை எல்லாம் அந்த எறும்பு

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/15&oldid=1525816" இலிருந்து மீள்விக்கப்பட்டது