பக்கம்:நல்ல எறும்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த எறும்புக்கு அப்போது கோபாலன்மீது மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால், அந்தச் சிறிய எறும்பு அதை எப்படி அவனுக்குத் தெரிவிக்கும் ? அவனிடம் பேசவும் அதனால் முடியாது; ஏதேனும் வெகுமதி கொடுக்கவும் அதனிடத்தில் பணம் இல்லை அல்லவா ? ஆதலால் அது தனக்குள் எண்ணி எண்ணிச் சந்தோஷப்பட்டது.

பிறகு அது அவ்வகுப்பு முழுவதும் சுற்றிக்கொண்டே வந்தது. சோம்பேறிப் பிள்ளைகளும், தூங்கு மூஞ்சிப் பிள்ளைகளும் சிலர் அங்கு இருந்தனர்; அந்த எறும்பு அவர்களை யெல்லாம் தக்கபடி தண்டித்துக் கொண்டே சென்றது.



8

இவ்விதம் அந்த எறும்பு செல்லும் போது பகல் ஒரு மணி ஆயிற்று. ஆதலால், “டாங்கு - டாங்கு,” என்று சாப்

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/22&oldid=1525795" இலிருந்து மீள்விக்கப்பட்டது