பக்கம்:நல்ல எறும்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு மணி கேட்டது. அப்போது பிள்ளை கள் தங்கள் பலகை புத்தகங்களை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தனர். மணி ஓசையைக் கேட்டதும் எறும்புக்கும் பசி எடுத்தது. அதற்குப் பாடசாலையிலே சாப்பாடு எப்படிக் கிடைசிகும்? அப்போது அவ்வகுப்பை விட்டு வெளியே செல்லவும் அச்சிறு எறும்பால் சிறிதும் முடியாது. பிள்ளைகள் அதைத் தங்கள் கால்களால் மிதித்து நசுக்கி விடுவார்கள் அல்லவா ? ஆதலால் அது அருகே இருந்த ஒரு சிறுவன் புத்தகத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. அச் சிறுவன், தன் பலகை புத்தகங்களைத் நலயின் மேல் வைத்துக் கொண்டு சாப் பிடும் இடத்திற்குச் சென்ருன். அந்த எறும் பும் மிக்க மகிழ்ச்சியோடு அப் புத்தகத் நின் மேல் ஏறிக்கொண்டு சென்றது. அச் சிறுவன் சாப்பிடும் இடத்தை அ ைந்தான். அங்கே அநேக சிறுவர்கள் வுை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். பாலன், கோதண்டன், கோவிந்த ன் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/25&oldid=774816" இலிருந்து மீள்விக்கப்பட்டது