இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
என்னம்மா! ஏன் இப்படி அழுகிறீர்கள்? என்ன நடந்தது? என்று கண்ணன் பதறினானா? இல்லையே!
அலட்சியமாகத் தன் அன்னையைப் பார்த்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான். சமயலறை பக்கம் போவதற்காக அடியெடுத்து வைக்க முயன்றான். ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினான் கண்ணன்.
கண்ணனின் தாய் குபீரென்று பாய்ந்து அவனிடம் ஓடி வந்தாள். அவன் புத்தகப் பையைத் திறந்து புத்தகங்களை எடுத்தாள். விரித்தாள்.
எல்லாப் புத்தகங்களையும் விரித்துப் பார்த்தாகி விட்டது. அவள் எதிர்பார்த்த பொருள் அங்கு இல்லை. பெரிய ஏமாற்றம் எரிச்சலை உண்டு பண்ணியது.