இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
22
இருந்த உணவை, தன் மகனுக்காக வைத்துவிட்டுப் பட்டினிகிடக்கின்றாளே!
இதனால் தானே, கைமாறு கருதாது கடமையாற்றும் தாயை எல்லோரும் தெய்வம் என்கிறோம்.
விறுவிறு என்று உள்ளே போய், சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கினான் கண்ணன், வாயும் கையும் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றன!
சாப்பாட்டுக் காரியத்தை சமர்த்தாக முடித்துக் கொண்டு வெளியே வந்தான். தாயின் வேதனையோ, தன் வீட்டுத் தரித்திர நிலையோ அவனுக்குப் புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.
தாய்க்கும் உதவி செய்கிறேன் என்று கடைக்குச் சாமான்கள், காய்கறி வாங்கப் போகும் கண்ணன்,