இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
28
'விண் விண் ணென்று வலி தெறிக்கத் தொடங்கியது, 'விஷம்' அல்லவா அவன் விரல்களிலிருந்து ஏறிக் கொண்டிருக்கிறது.
'ஐயோ அம்மா' என்று அலறினான் கண்ணன்.
மகன் அலறலைக் கேட்டு கமலம் ஓடிவந்தாள். அவளுக்கிருந்த பசி மயக்கம் எல்லாம் பறந்தோடிப் போனது போல ஒடி வந்தாள்.
'கையிலே ஏதோ கடித்து விட்டது. கடுக்கிறது என்று கத்தினான். மூலையைக் காட்டினான்.
விளக்கைப் பொருத்தி எடுத்துக் கொண்டு ஒடிப்போய் பார்த்தாள் கமலம்.
ஐந்து ரூபாய் நோட்டின் மேல் படுத்திருந்த 'கருந்தேள்' ஒன்று மெதுவாக நடந்து போகத் தொடங்கியது.