இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
32
பிற்கால வாழ்க்கையைப் பற்றி முதல் முறையாக நினைத்தான் கண்ணன்.
'ஐயோ என்ன நடந்தது?’ என்று எல்லோரும் சத்தமாகக் கேட்டதைத் திரும்பிப் பார்த்தான் கண்ணன்.
இரத்த வெள்ளத்திலே அவனது தாயைத் தூக்கி வந்து கொண்டிருந்தனர் சிலர்.
ரிக்ஷாவுக்காக, கமலம் கவலையுடன் ஒடிக் கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால், கால் எலும்பு முறிந்து விட்டது.
தனக்காகத் தன் தாய், தன் கால்களையே முறித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த கண்ணன், அவள் கால்களில் விழுந்து, தலையை மோதிக் கொண்டு, திருந்திட்-