பக்கம்:நல்ல கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


டேம்மா! திருந்திட்டேம்மா! இனிமேல் திருடவே மாட்டேன், பொய்சொல்லவே மாட்டேன்' என்று அழுதான்.

அந்த வேதனையிலும், 'இது போதுமடா என் கண்ணே' என்று ஆதரவாக அணைத்துக் கொண்டாள் கமலம்.

ஒருவருக்காக வந்த ரிக்‌ஷா, இருவரையும் ஏற்றிக் கொண்டு போனது.

கண்ணனின் கண்கள் குற்ற உணர்வால் கண்ணீரைப் பெருக்கியது தாய் கமலத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

ஆனந்தக் கண்ணீர்தான். ஆமாம்! பணம் தந்த பரிசல்லவா! தன் மகன் திருந்திவிட்டதல்லவா அவள் பெற்ற பெரிய பரிசு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/35&oldid=1081129" இலிருந்து மீள்விக்கப்பட்டது