பக்கம்:நல்ல கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

42


'குழாய் சுத்தம் செய்யும் வேலை இருப்பதால், காலை எட்டு மணி வரைதான் தண்ணீர் வரும். அதற்கு முன்னால் தேவையான நீரைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று மாநகராட்சி கொடுத்திருந்த பத்திரிக்கை அறிவிப்பின்படி, குழாயில் தண்ணீர் வரவில்லை.

'படித்திருந்தும், அந்த அறிவிப்பை மறந்து போய் விட்டேனே. என்று தன் மண்டையில் ஒரு தட்டு தட்டிக் கொண்டான் மணி.

இதற்குள் எட்டரை மணி ஆயிற்று. எப்படியும் குளித்தாக வேண்டும்! என்ன செய்வது? ஓடினான் கிணற்றை நோக்கி.

'வீட்டு வேலைகளை முடித்து விட்டு வேலைக்காரி போய் விட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/44&oldid=1081146" இலிருந்து மீள்விக்கப்பட்டது