இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
51
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
தேனீக்கள் போல் 'ஏறுமிடத்தில்' பஸ் வாசலில் மொய்த்துக் கொண்டு நின்றனர்.
ஆறறிவு படைத்த மக்கள் அனைவரும், பட்டிக்குள்ளே ஆடுகள் நுழைவது போல, முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.
பஸ்ஸுக்குரிய கட்டணம் ஒரு கையிலும், சான்றிதழ் உள்ள பையை மற்றொரு கையிலும் பிடித்திருக்க, மணியும் ஏற முயன்றான்.
அவன் பஸ்ஸுக்குள் ஏறவில்லை. கூட்டத்தின் இடையிலே வசமாக சிக்கிக் கொண்ட அவன் கூட்டத்தால் வாசலுக்குள் நுழைக்கப் பட்டு, திணிக்கப்பட்டான்.
உடல் நசுங்கி, உடை கசங்கி, மூச்சுத் திணறி, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க உள்ளே எப்படியோ வந்து விட்டான்.