இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
எவன் ஒருவன் காலையில் விழிக்கிறானோ, அவனே காரியங்கள் அனைத்தையும் நினைத்து, அவைகளுக்காகத் திட்டமிட்டு நடப்பான். அதிக நேரம் தூங்குபவன், அவசரத்துடன் எழுந்து அலங்கோலமாக காரியங்கள் செய்வதால்தான் அவதிக்கு உள்ளாகிறான். 'சோம்பல் உள்ளவர் தேம்பித் திரிவார்' என்பது பழமொழி. மணிக்கு வந்த தண்டனையைப் பார்த்தீர்களா?
தன் தவறை மணி உணர்ந்தான். இது போல் இனி தூங்கமாட்டேன் என்று தந்தையிடம் உறுதி கூறினான். தனக்கு உதவி செய்த இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறினான்.