இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
'தோல்வியை அடைந்து விடுவோமோ' என்று சிங்காரத்தின் தோழர்கள் தொங்கிய முகத்துடன் கேட்ட பொழுது 'நானிருக்க பயமேன்' என்று அவர்களை சமாதானம் செய்தான் சிங்காரம்.
சிங்காரத்தின் குழுவில் உள்ள அனைவரும் தொடப்பட்டும், பிடிக்கப்பட்டும் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இப்பொழுது சிங்காரம் மட்டுமே தனியாக நிற்கிறான்.
ஆட்டத்தின் உச்சக்கட்டம் இது, 'சிங்காரம் ஆட்டத்தைவிட்டு வெளியேற்றபட்டால், அவனும் அவனது குழுவினரும் தோற்று விடுவார்கள்'. அப்புறம் குதிரைதூக்க வேண்டுமே!