இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
சிங்காரம் இப்பொழுது அடுத்த குழுவை நோக்கிப் பாடிப் போக வேண்டும். யாரையாவது தொட்டு விட்டு வந்தால் தான் ஆட்டம் தொடரும். பிடிப்பட்டால் தோல்வி தான்.
சந்திரனையல்லவா சிங்காரம் குதிரை ஏற்ற வேண்டும்? இதை நினைக்கவே அவமானமாக இருந்தது.
ஆகவே, சிங்காரம் ஆவேசத்துடன் பாடிப் போனான். சந்திரனிடம் நன்றாக சிக்கிக் கொண்டான். நான்கு பேர்கள் நன்றாக இவனைப் பிடித்துக் கொண்டார்கள். ஒருவித வெறியுடன் எல்லோரையும் இழுத்துக் கொண்டு நடுக் கோட்டை நோக்கி வரும் பொழுது, மூச்சு நின்று போய்,