இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
77
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கொண்டே, அடிக்கக் கையை ஓங்கினான் சந்திரன்.
மீண்டும் ஒரு குத்து விழுந்தது சந்திரன் முகத்தில், அவ்வளவுதான். திடீரென்று கீழே விழந்தான். சந்திரனின் கைகளும் கால்களும் ‘படக் படக்' என்று உதைத்துக் கொண்டு, சற்று நேரத்தில் அடங்கி விட்டன.
எல்லோரும் பயத்துடன் சந்திரனையே பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்களிலே தைரியசாலி ஒருவன், சந்திரன் மூக்கிலே கையை வைத்துப் பார்த்தான்.
மூச்சைக் காணோம்.
'சந்திரன் செத்துப் போயிட்டாண்டா' பேய்க் கூச்சல் போட்டான் அந்தப் பையன்.