இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
81
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
என்ற பசி மயக்க நினைவோடு வருவோர் போவோரையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.
அழகான கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது எதிர்ப்புறமுள்ள துணிக் கடையை நோக்கிப் போகத் தொடங்கினாள், கையிலே சிறு அலங்காரப் பை ஒன்று தொடங்கிக் கொண்டிருந்தது.
வாட்ட சாட்டமான உடல் அமைப்புள்ள ஒருவன், தீடிரென்று அந்த பெண்னை நோக்கிப் பாய்ந்தான். அவள் கைப் பையை பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
'திருடன் திருடன்' என்று அவள் அலறிக் கத்தினாள்.