இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
84
சுற்று முற்றும் பார்த்தான். ஒரு கூட்டமே கூடியிருந்தது.
கூட்டத்தை விலக்கி, சிங்காரத்தை தன் காரிலே ஏற்றிக் கொண்டு அந்த பெண் உடனே புறப்பட்டுவிட்டாள்.
'ஐந்து ஆயிரம் ரூபாய் என் பைக்குள் இருந்தது. உன்னால் தான் இந்தப் பணம் காப்பாற்றப்பட்டது' என்று கூறி, சிங்காரத்தின் திறமையையும், வீரத்தையும் பாராட்டினாள். தன் நன்றியைத் தெரிவித்தாள்.
உன் பெயர் என்ன? அன்புடன் கேள்வி வந்தது.
சிங்காரம்... மிக மெதுவாகவே கூறினான்.
உன் வீடு எங்கே?
எனக்கென்று வீடோ, ஆளோ இல்லை.
அப்படியென்றால்...
அநாதை...