பக்கம்:நல்ல குழந்தை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தது. அங்கே ஒருவரும் இல்லாததால், அது கோயிலின் கோபுரத்தைப் பார்த்து, “அம்மா, அப்பா,” என்று அழ ஆரம்பித்தது.

தகப்பனார் தண்ணீருக்குள் இருந்ததால் குழந்தை அழுவது அவருக்குக் கேட்கவில்லை; அந்தக் குழந்தை எப்போதும் கடவுளை வணங்கும் நல்ல குழந்தை அல்லவா? ஆதலால், கடவுள் அம்மையும், அப்பனுமாக அந்தக் குழந்தையின் எதிரிலே வந்தார்; அதை மடியின் மீது வைத்துக்கொண்டார்; ஒரு பொன் கிண்ணத்தில், அதற்குப் பால் கொடுத்தார்.

கடவுளைக் கண்டதும் குழந்தைக்கு மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று. அவர் கொடுத்த பாலைக் குடித்ததும் அதற்குப் பக்தி அதிகமாயிற்று;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/10&oldid=1354583" இலிருந்து மீள்விக்கப்பட்டது