பக்கம்:நல்ல குழந்தை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஞானசம்பந்தருக்கு வயது ஐந்து ஆயிற்று. அப்போது, அவருக்குப் பூணூல் கலியாணம் செய்தார்கள். பூணூல் கலியாணம் என்றால் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உபாத்தியாயரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை ஞானசம்பந்தருக்கு வயது ஐந்துக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது அவர், தகப்பனார் உதவி இல்லாமலே தனியே செல்ல ஆரம்பித்தார். ஆனால், கடவுளிடம் பக்தியுள்ள பல பெரியோர், ஞானசம்பந்தர் செல்லும் ஊர்களுக்கெல்லாம் கூட்டம் கூட்டமாக அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.

ஞானசம்பந்தர் ஒரு நாள் மதுரை என்னும் பெரிய பட்டணத்துக்குச்

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/22&oldid=1354633" இலிருந்து மீள்விக்கப்பட்டது