பக்கம்:நல்ல குழந்தை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்போது அவர் பட்டாடை அணிந்தும், உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டும் இருந்தார். அவர் மார்பிலே பலவிதமான பொன் ஆபரணங்களோடு உருத்திராட்சமாலையும் காணப்பட்டது. அவருக்குப் பின்னும் முன்னும் கணக்கில்லாத அன்பர்கள் கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுள் சிலர் அவருக்குக் குடை பிடித்தார்கள்; சிலர் சாமரை வீசினார்கள்; சிலர் கொடி பிடித்தார்கள் ; வேறு சிலர் “ஞானசம்பந்தர் வருகிறார்—வருகிறார்,” என்று மிகவும் சந்தோஷத்துடன் கூவிக்கொண்டு முன்னே சென்றார்கள்; மற்றும்சிலர், “ஞானசம்பந்தர் வாழ்க—வாழ்க,” என்று வாழ்த்திக்கொண்டு பின்னே வந்தார்கள்.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/35&oldid=1354655" இலிருந்து மீள்விக்கப்பட்டது