உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

9

                 மருத்துவனும், உயிர்ப்பினைக் கட்டுப் படுத்தும்
                 அறிஞனும் நாளோடு தவறாது காணும் முதுமையை
                 நீ சந்தித்ததில்லை எனில் புதுமை அன்றோ !

நிலவு கூறினாள்.
                ஆடல் பயில்வாரின் உடல் வாடல் இல்லை.
                புதுமை மாறாத ஆடற்கலைஞருக்கு
                முதுமை நேருமோ பேரரசியாரே?
                                                              [அனைவர் கண்ணிலும் வியப்பு]

பேரரசியார் பேசுகின்றார்.
               நிலவே! நீடுவாழ்க. புதியதோர் எண்ணம்!
               நினைக்கும் தோறும் வியப்பைச் செய்யும்
               ஓர் ஒப்பற்ற நிலை நீ தந்தாய் நீ வாழ்க!
               ஆடல் அரங்கு முடிவு பெற்றது. அனைவரும்
               உணவு கொள்ளச் செல்வோமாக.

                                        [அனைவரும் செல்கிறார்கள். படைத் தலைவன்
                                         மகளாகிய கிள்ளை மட்டும் பறக்கவில்லை]

காட்சி 2



                         [அரங்கில் ஒரு புறம். நிலவு காற்சதங்கையை
                         அவிழ்க்கக் குனிகிறாள். அதற்குள் வேறோர்
                         மலர் போன்ற கை சதங்கையை அவிழ்த்து
                         உதவி செய்கிறது.]

நிலவு : என் செல்வமே! நீ யார்?

கிள்ளை : அன்னையே! படைத்தலைவர் மகள்; கிள்ளை

நிலவு : உன் பிரிவு உன் அன்னை தந்தையர்க்குத் துன்பத்தைச் செய்யுமே!

கிள்ளை : ஆடல் பயிலவிரும்புகிறேன். அந்த விருப்பம்
                    என் உடலின் ஒவ்வோர் அணுவிலும்

2—6716