இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதிதாசன்
13
முல்லை : விளங்கவில்லை.
சாலி : இளவரசிக்குத் திருமணமா?
கிள்ளை : உனக்கும் நினைவு இல்லை. முல்லை பிறந்த
நாள் அடுத்த வெள்ளிக்கு.
முல்லை : ஆ!
சாலி : உனக்கு மட்டும் எப்படி நினைவு வந்தது?
கிள்ளை : முல்லை எப்போதும் என் நினைவில்
நிலையாக இருக்கிறாள்.
முல்லை : கிள்ளை நீ என் மீது வைத்துள்ள அன்பு
பயனற்றது.
கிள்ளை : அது உனக்குத் தெரியாதோ, அன்பு
பயனை எதிர்பார்த்ததல்ல. பயனை
எதிர்பார்த்தது எது தெரியுமா? வாணிகம்.
முல்லை : வாயாடி! போவோம்.
சாலி : கிள்ளையோடு பேசுவதில் தெவிட்டு
ஏற்படுவதில்லை.
[அனைவரும் எழுந்திருக்கிறார்கள்]