பாரதிதாசன்
23
அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை
என்று கூறி சாப்பிட்டபின் அரண்மனைக்குப்
போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள்.
அதை அவள் இடையில் செருகினாள். அது,
துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி
அளித்தது.
அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான்
கிள்ளையை அறமன்றுக்கு அழைக்க வேண்டும்.
அவள் என் படைத்தலைவர் மகள், உனது
அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன்
அனைவரும் நிகர்.
முல்லை : அவள் நல்லவள் அப்பா.
அரசர் : அறமன்றம் அவளை நல்லவள்
என்று உறுதி செய்யட்டுமே!
சாலி : அரசே, அவள் தீயவள். அவள் தீயவளானால்,
அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும்.
அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில்,
சேர்க்கையுடையவர் அனைவரையும் மன்று
நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன்.
சாலி : வணக்கம்.
[போகிறாள்]
கன்னல் : கிள்ளை நல்லவள் என்று நான்
எண்ணினேன்.
முல்லை : இப்போதும் அவள் நல்லவள் தான்
அம்மா
[அரசர் போகிறார். முல்லை தலை
குனிந்தபடி வருத்தத்தோடு தன்
அறை நோக்கிச் செல்லுகிறாள்]