உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

23

           அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை
           என்று கூறி சாப்பிட்டபின் அரண்மனைக்குப்
           போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள்.
           அதை அவள் இடையில் செருகினாள். அது,
           துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி
           அளித்தது.

அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான்
                கிள்ளையை அறமன்றுக்கு அழைக்க வேண்டும்.
                அவள் என் படைத்தலைவர் மகள், உனது
                அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன்
                அனைவரும் நிகர்.

முல்லை : அவள் நல்லவள் அப்பா.

அரசர் : அறமன்றம் அவளை நல்லவள்
              என்று உறுதி செய்யட்டுமே!

சாலி : அரசே, அவள் தீயவள். அவள் தீயவளானால்,
            அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும்.

அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில்,
             சேர்க்கையுடையவர் அனைவரையும் மன்று
             நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன்.

சாலி : வணக்கம்.

                                                                           [போகிறாள்]

கன்னல் : கிள்ளை நல்லவள் என்று நான்
                     எண்ணினேன்.

முல்லை : இப்போதும் அவள் நல்லவள் தான்
                       அம்மா

           [அரசர் போகிறார். முல்லை தலை
           குனிந்தபடி வருத்தத்தோடு தன்
           அறை நோக்கிச் செல்லுகிறாள்]