பாரதிதாசன்
27
கிள்ளை : அவை அனைத்தும் மெய்
அரசர் : முல்லையே இவை மெய்யா?
முல்லை : ஆம் மெய்.
அரசர் : நீ என்ன கூறுவாய் கிள்ளையே!
கிள்ளை : என்னிடம் எப்போது பார்த்தாள் சாலி?
சாலி : நேற்றுக் கையில் வைத்திருந்த போது
தான் சாலி பார்த்தாள்.
கிள்ளை : எந்த இடத்தில்
சாலி : இளவரசியை விட்டு வெளிவருகையில்
கிள்ளை : எப்படி வைத்திருந்தேன்?
சாலி : கையில்
கிள்ளை : எந்தக் கையில் ?
சாலி : உம்--வலக்கையில்!
கிள்ளை : என் வலக்கையில் அச் சிறிய பொருளை
வைத்திருந்தால் அது எப்படித் தெரிந்தது
சாலிக்கு?
சாலி : நான் தான் என்ன அது என்று கேட்டேன்
கிள்ளைதான் இது மாணிக்கக் கணையாழி
என்று கூறினாள்.
கிள்ளை : அது பற்றிச் சாலி கிள்ளையை ஒன்றும்
கேட்கவில்லையா?
சாலி : இல்லை
முல்லை : பேரரசே நான் ஒன்று கூற முன்வருகிறேன்.
சாலி முதலில் என்னிடமும் தங்களிடமும், கூறியது
வேறு அவள் கூறினாள்: கிள்ளையிடமிருந்து ஏதோ
ஒன்று கீழ் விழுந்தது. அது சிவப்பொளியுடையதாய்
இருந்தது. அதை அவள் இடையில் செருகினாள், அது
தங்கக் காசைத்துணியில் அழுத்திய அளவில்
தோன்றிற்று என்றாள்.