28
நல்ல தீர்ப்பு
இப்பொழுது சொல்வன அனைத்தும் வேறு! கிள்ளை
நல்லவள் இப்படிப்பட்ட குற்றம் செய்பவள் அல்ல.
சாலி கிள்ளையைக் குற்றத்தில் உட்படுத்த எண்ணி
இவ்வாறு வேண்டு மென்றே கூறுகிறாள் என்று
எனக்குத் தோன்றுகிறது.
அரசர் : மன்றிலுள்ளவர்களே! அரண்மனைப் பொருள்
களவு போனால், அதுபற்றி யார் மேல் சிறிது
ஐயம் ஏற்பட்டாலும் அவர்களை அயல் நாடு கடத்தி
வைக்கும்படி அற நூல் கட்டளையிடுகிறது.
நான் அதன்படி, கிள்ளை பீலி நாட்டில் நாலாண்டு
வாழ்ந்திருக்கத் தீர்ப்பு கூறினேன் இதன்படி கிள்ளை
இன்றே பீலி நாட்டுக்குப் புறப்பட்டுவிடவேண்டும்.
[அனைவரும் கண்கலங்குகிறார்கள்]
கிள்ளை : பீலி நாட்டிற்கா? நம் சிற்றரசிருக்கும் இந்தப்
பீலி நாட்டுக்குத் தானே பேரரசே?
அரசர் : ஆம் இன்றே பயணத்தைத் தொடங்கு!
[கிள்ளை சிரிப்பில் குதித்தாள். அவள்
முல்லையிடம் ஓடிவந்து உரத்த குரலில்,]
இளவரசியே, என் பொருட்டு நீ வருந்து
கின்றாயா? நீ மகிழ்ச்சியடை! சாலியின்
சூழ்ச்சி; என்னைப் பீலியில் சேர்த்தது அவள்
என்மேல் இல்லாததைச் சொல்லி என்னை
அந்த நிலாவிடம் சேர்த்தாள். நாலாண்டில்,
எனக்கு, ஆடல் பாடல் நன்றாய் வந்து விடுமே.