32
நல்ல தீர்ப்பு
ஆடற்சாலை முன்னேற்றத்திற்கு, நிலாவை
வரவழைத்து, கிள்ளை, சாலி முதலிய
அனைவர்க்கும் சொல்லி வைக்கச் செய்ய
வேண்டும்! என்ன!
கிள்ளை : சாலி, என்னை மன்னிப்புக்கேள் விரைவில்.
சாலி: மன்னிக்க வேண்டும் -- எங்கே பேரரசே,
ஆடல் அரங்கம்?
அரசர் : ஆடற்கலை நம் நாட்டில் எழுக.
குழந்தைகளே உங்கள் விருப்பம் நன்று. இதோ
அனைத்தும் ஏற்பாடு செய்துவிடுகின்றேன்,
காட்சி 3
[பிறை நாட்டில் புதிதாக அமைத்த அரங்கில்,
நிலாவினால் பயிற்றப்பட்ட பெண்கள், கிள்ளை,
சாலி, தாழை, தோரை, முல்லை முதலியவர்கள்
ஆடுகின்றார்கள்]
நிலா பாடுகிறாள்.
செங்கதிர் எழுந்தான் திரைக்கடல் மேலே
சிரிக்கும் செந்தாமரைபோலே!
எங்கணும் ஒளியே! எங்கணும் உணர்வே!
இனிதாய் மலர்ந்ததுகாலை!
ஏரினைத் தூக்கி உழவர்கள் தொடர்ந்தார்!
எருதுகள் முன்செல்லநடந்தார்!
ஊரினிற் பெண்கள் நீர்க்குடம் சுமந்தே
உவப்புடன் குளக்கரைஅடைந்தார்!
வாணிகர் கடைகளைத் திறந்திடு கின்றார்
மாணவர் ஏட்டோடுசென்றார்.
வீணையைப்போல் அங்காடிகள் கூவி
வீதியெல்லாம் நடக் கின்றார்.
எழுந்தன அறங்கள் நிறைந்தன அன்பும்!
ஏகின ஏகின துன்பம்!
பொழிந்தன பொழிந்தன தமிழரின் நாட்டில்
புதுமைகள் ! எங்கனும்இன்பம்!
முற்றும்.