“ஐயோ! என் அருமை வீரா!” என்று உரக்கக் கத்தினாள் சீதா.
“ஐயோ! வீரன் மேல் தென்னை மரம் அல்லவா விழுந்து கிடக்கிறது! இறந்துபோய்விட்டதோ!” என்று கூறிக்கொண்டே முரளி வீரனின் அருகே ஓடினான்.